உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மட்டக்களப்பில் தீப்பற்றி வீடு முற்றாக தீக்கிரை – உரிமையாளருக்கு தீக்காயம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் நேற்று மாலை ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலானது.சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த புவனசிங்கம் – சரோசாதேவி என்பவருக்குச் சொந்தமான வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.


வீட்டின் உரிமையாளர் அயல் வீட்டில் இருந்தபோது, திடீரென வீடு தீப்பற்றியதை அயல்வாசிகள் கண்டு கூச்சலிட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்றபோது, வீடு கட்டுப்பாட்டை மீறி எரிந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், வீட்டினுள் இருந்த பொருட்களை மீட்க முயன்றபோது, உரிமையாளரின் முகப்பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
வீட்டிலிருந்த பெறுமதியான உபயோகப் பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயினால் முற்றாக அழிந்துள்ளன.முதற்கட்ட விசாரணைகளின்படி, வீட்டில் ஏற்பட்ட மின்னழுத்தக் கோளாறே தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன், உப தவிசாளர் த. கயசீலன் மற்றும் வட்டார உறுப்பினர் பா. அனோஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சேத விவரங்களையும் கேட்டறிந்தனர்.மேலும், களுவாஞ்சிகுடி மின்சார சபை அதிகாரிகள் மற்றும் வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மின்சாரப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பற்றாக்குறையே இவ்வாறான தீ விபத்துகளுக்கான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0