உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் கவலைக்கிடம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்தியிலிருந்து நிலாவரை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பாரவூர்தியுடன் பலமாக மோதியுள்ளது.இந்த மோதலில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

விபத்துக்குப் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற சுன்னாகம் பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களைப் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இருசக்கர வாகனத்தின் அதீத வேகமே விபத்திற்கான பிரதான காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0