உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சி.ஐ.டியின் 4ஆம் மாடி சித்திரவதை முகாம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடியானது ஒரு சித்திரவதை முகாமாகவே காணப்படுகின்றது என்றும், மனித குலத்துக்கு எதிரான வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை அரசு தயாரித்துள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
“1979 ஆம் ஆண்டில் அப்போதைய சூழலுக்குத் தேவையான ஒரு தற்காலிக ஏற்பாடாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாகப் பல்வேறு சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடிக்கு அழைத்துச் செல்லப்படும் சந்தேகநபர்கள் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுகின்றார்கள். அங்கு அவர்களுக்கு அமர்வதற்கு ஒரு நாற்காலி கூட வழங்கப்படுவதில்லை. இன்றும் அத்தகைய மனிதாபிமானமற்ற சூழலே அங்கு நிலவுகின்றது. அந்த இடம் ஒரு சித்திரவதை முகாமாகவே மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அரசைப் பாதுகாக்கும் நோக்கில், மனித குலத்துக்கு எதிரான புதிய சட்ட வரைவை அரசு தயாரித்துள்ளது. தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்துவிட்டு, மனிதநேயமிக்க ஒரு புதிய சட்டத்தை உருவாக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

97 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

36 0 0