சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை வாகனேரி பிரதான வீதியின் பால் பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உறவினரை சந்தைக்கு செல்வதற்காக திருமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் விட்டுவிட்டு மீண்டும் வாகநேரி நோக்கி சென்று கொண்டிருக்கையில் வாகநேரியிலிருந்து கிறவல் ஏற்றி வந்திருந்த பாரவூர்தி எதிர்திசையில் உந்துருளியில் வந்து கொண்டிருந்த இளைஞன் மீது மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாரவூர்தி சாரதியை பொலிஸார் கைது செய்ததுடன் குறித்த பாரவூர்தியினை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


