தேசபந்து தென்னகோனின் வழக்கு விசாரணைகள் நிறைவு.!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் மனுக்களின் விசாரணையை இன்று வியாழக்கிழமை (12) முடிவுக்குக் கொண்டுவர உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, மனுதாரர்களின் ஒப்புதலுடன் மனுக்களின் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.