கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மூலம் ஆறு இலட்சம் டொலர் வருமானம்.!
இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளின் மூலம், வர்த்தக கப்பல்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வசதிகள் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா கூறியதாவது, கடந்த ஆண்டு அக்டோபர் 03 முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்பாடுகளில் நான்கு மாத காலப்பகுதியில் 598,250 அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டார்.
இலங்கை கடற்படை, வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வசதிகளை வழங்கி வருகின்றது.ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா, ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெளிவுபடுத்தியபோது, “இந்த நடவடிக்கைகள் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்களிப்பாகின்றன” என குறிப்பிட்டார்.