வடமராட்சி கிழக்கில் பனைமரங்கள் சட்டவிரோதமாக அழிப்பு – மக்கள் கடும் குற்றச்சாட்டு.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பனைமரங்கள் அதிகளவில் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.யுத்த காலத்தில், குறிப்பாக 2009ஆம் ஆண்டு வரை, இலட்சக்கணக்கான பனைமரங்கள் அழிக்கப்பட்டதாகவும், யுத்தம் முடிவுக்கு பின்னரும் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பனைமரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.காணி பாதுகாப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி பனைமரங்கள் அகற்றப்படுகின்றன எனவும், வடமராட்சி கிழக்கிலிருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பனைகள் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதமை குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.பனைமரங்கள் கைதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடையவை எனவும், அதிகளவு பனை அழிப்பு காரணமாக அவர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனால், பனைமரங்களை பாதுகாக்கும் வகையில் பனை அபிவிருத்தி சபையும், பொலிஸாரும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.