உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

விசாரணைக்காக சபாநாயகர் பதவி விலகத் தேவையில்லை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தனது பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக அவரைப் பதவியிலிருந்து விலகுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏதேனும் தீர்மானம் எடுத்துள்ளதா என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேறு எவராவது, அத்தகைய விசாரணைகளுக்காகத் தமது பதவிகளைத் துறந்துள்ளனரா? அவ்வாறான நடைமுறை எதுவும் இதற்கு முன்னர் பின்பற்றப்படவில்லை.” – என்றார்.

சபாநாயகர் பதவியில் நீடிப்பது விசாரணைகளுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது என்று வலியுறுத்திய அவர், ஆணைக்குழு தனது விசாரணைகளை எவ்வித இடையூறுமின்றி சுயாதீனமாகவும் தாராளமாகவும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

55 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

95 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

84 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0