உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கூட்டணி உருவாகும் – சஞ்ஜீவ எதிரிமான்ன.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஸ்ரீலங்காவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் விரைவில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி உருவாகும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.அவர், களுத்துறை பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக கடந்த 75 ஆண்டுகளின் அரசியலை சாபம் என விமர்சித்தது.

ஆனால் இன்று அதே அரசியல் செயலொழுங்கைப் பின்பற்றுகின்றனர். எம் மீதும் ராஜபக்ஷக்கள் மீதும் கடந்த காலங்களில் பல போலிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றை சட்டம் முன் நிரூபிக்க முடியாமல் அரசு திணறுகிறது” என்று கூறினார்.சாட்சியங்கள் அழிக்கப்பட்டதால் விசாரணைகள் தாமதப்படுவதாகவும், அரசுக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்.

சஞ்சீவ எதிரிமான்ன மேலும் கூறியதாவது: “நாம் கட்சி அடிப்படையில் பலமாக உள்ளோம். அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து விரைவில் புதிய கூட்டணி உருவாக்கி எதிர்வரும் தேசிய தேர்தல்களை எதிர்கொள்வோம். நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் தேர்தலை நடத்துமாறும் அரசு தயார் செய்ய வேண்டும்.”

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0