உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நிதி மோசடி குற்றச்சாட்டு: கைது செய்யப்பட்ட தொழிலதிபர் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் பிணை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் 740 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


தொழிலதிபர் நிமல் சிசிர குமார மற்றும் கெஹெலிய ரம்புக்வெலவின் உறவினரான பண்டார ரம்புக்வெல ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிவான், இருவரையும் தலா 5 மில்லியன் ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.மேலும், பிணை நிபந்தனைகளாக,
இருவருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது,அவர்களது கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கருதப்படும் 740 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ய உதவியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0