உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

திருக்கோவில் பகுதியில் மக்கள் பங்கேற்புடன் கொண்டாடப்பட்ட பாரம்பரிய பொங்கல் விழா.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தின் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தில், சமூக தரிசனம் ஒன்றியம் தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் 10வது ஆண்டு பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு SVO அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில், அமைப்பின் ஸ்தாபகர் திரு. பி. நந்தபாலு தலைமையில் நடைபெற்றது.


நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள், சிரேஷ்ட பிரஜைகள் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர். இதனுடன், பொது அமைப்புகளின் இணைப்பில் பொங்கல் விழா நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா. ஸ்ரீநேசன் மற்றும் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், சமயத் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நிறைவில் கௌரவிப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், பிரதான அதிதிகளின் விசேட உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0