புதிய அரசமைப்பு வெறும் கனவு: விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு.!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தற்போது தேசிய மக்கள் சக்தி அரசின் புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் எடுக்காததைக் கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார்.இவர் கூறியதாவது:
“தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாகும் என்பது வெறும் கனவு மாத்திரம். தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சியில் நான்கு மாதங்கள் கடந்தும், புதிய அரசமைப்பை உருவாக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை.ஒரு அரசு புதிய அரசமைப்பை கொண்டு வர விரும்பினால், முதலில் ஆரம்ப கட்ட பணிகளைச் செய்ய வேண்டும்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இது வெறும் கனவு என்பதை நான் கூறுகிறேன்.”
அரசியல் வட்டாரங்களில் இதனால் விவாதங்கள் எழுந்துள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசின் தேர்தல் வாக்குறுதியில் புதிய அரசமைப்பை உருவாக்கும் திட்டமும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையும் முன்வைப்பதாக கூறப்பட்டிருந்தது.