உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டவிரோத கட்டுமான குற்றச்சாட்டு – விளக்கமறியலில் உள்ளோரின் பிணை மனு ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலை நிறுவி, அதனை ஒட்டிய வகையில் சட்டவிரோத கட்டுமானம் மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், நான்கு தேரர்கள் உட்பட 10 எதிராளிகள் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இவ்வழக்கில் பிணை அனுமதி கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிராளிகள் தற்போது திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் புதிய பிணை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.அந்த மனுவை எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.மேல் நீதிமன்றத்தில் பிணை மனு தொடர்பான தீர்மானம் வழங்கப்படவுள்ளதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை திருகோணமலை நீதிவான் நீதிமன்றமும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.


மேல் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட பிணை மனு தொடர்பாக, வழக்காளி மற்றும் ஏனைய தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னர் தீர்மானிக்க வேண்டுமென மேல் நீதிமன்ற நீதிபதி என். எம். எம். அப்துல்லா வழக்கை ஒத்திவைத்தார்.இன்று காலை வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிராளிகள் மேல் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மேல் நீதிமன்ற வழக்கின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நீதிவான் நீதிமன்றமும் தனது நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைத்தது.பின்னர் மதியம் மீண்டும் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேல் நீதிமன்றம் பிணை மனுவை 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக மன்றில் அறிவிக்கப்பட்டது.


வழக்கு முடிவடைந்த பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேரர்கள் மற்றும் ஏனைய எதிராளிகள் மீண்டும் விளக்கமறியல்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அந்த வேளையில், நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கூடியிருந்த சில தேரர்களும் பொதுமக்களும் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0