குற்றங்களை செய்து விட்டு வெளிநாடுகளில் ஒளிந்திருக்கும் நபர்களின் சொத்துக்கள் பறிமுதல்.!
இலங்கையில் குற்றங்களை செய்து விட்டு வெளிநாடுகளில் ஒளிந்திருக்கும் நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டில் மட்டும் பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய, 500 இலட்சம் ரூபாய் சொத்துக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
அதற்கமைய இந்தியா உட்பட வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பலரை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.