யாழ் வடமராட்சியில் இனங்காணப்பட்ட மோட்டார் வகைக் குண்டு .!
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று தனிப்பனை பகுதியில் இன்று (07) பிற்பகல், வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக் குண்டு ஒன்று இனங்காணப்பட்டது.குறித்த பகுதியில் வசிக்கும் நபர்கள், ஆடு மேய்ப்பதற்காக காட்டுப் பகுதியைச் சென்ற போது அந்த குண்டை கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்கள் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ஆபத்தான நிலையில் காணப்பட்ட மோட்டார் வகைக் குண்டை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்காக கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவு கோரியுள்ளனர்.நீதி மன்ற உத்தரவு கிடைக்கும் வரை, மருதங்கேணி பொலிஸார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.