மண்முனை தென் எருவில் களுவாஞ்சிக்குடி பஸ் நிலையம் அருகே நீர் தேக்கம், பொதுமக்கள் புகார்.!
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பஸ் தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாக நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், இப் பகுதியில் பல்வேறு கடைத்தொகுதிகள் பாதிக்கப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பொதுமக்கள், இதனை சரி செய்ய உரிய அதிகாரிகள் உடனடியாக முன்னேற வேண்டும் என்றும், வீதியிலும் நீர் தேங்கி நிற்பதால் முறையான வடிகால் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.