மதுவரி திணைக்களத்தில் டிஜிட்டல் நவீனமயமாக்கல் மூலம் வருமான சேகரிப்பு மேம்பாடு – அனைத்து தொழிற்சங்கங்களும் ஒப்புதல்.!
மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு மதுவரித் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதை தொடர்பான இணக்கப்பாடு, கடந்த 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரச வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பணியக பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க கலந்து கொண்டனர்.அதாவது, மதுவரித் திணைக்களத்தின் வினைத்திறனை மேம்படுத்தி வருமான சேகரிப்பை உயர் மட்டத்திற்கு கொண்டு சேர்ப்பதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கம்.
மேலும், டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை, புதிய சீர்திருத்தங்கள், மனித வள அபிவிருத்தி, உத்தியோகத்தர்களின் நலன்கள் உள்ளிட்ட விஷயங்களையும் இந்நிகழ்வில் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.இதில் மதுவரித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.