டிட்வா சூறாவளியில் பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்பான அதிர்ச்சி தகவல்.!
பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், டிட்வா சூறாவளி காரணமாக பெற்றோரை இழந்த 103 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, இக் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் அவர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனித்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பெற்றோர் இழந்த குழந்தைகளை பொறுப்பேற்க விருப்பமுள்ளோர் பலர் முன்வந்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.