மட்டக்களப்பு இந்துக்கல்லூரி 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி.!
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு நாள் நடைபவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது
மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி தனது 80வது ஆண்டு நிறைவு நாளையொட்டி நடைபவனியை இன்று (07-02) சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில், பாடசாலையிலிருந்து வாகன பேரணியுடன் இந்த நடைபவனி ஆரம்பமானது.
நடைபவனியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், மாநகரசபை ஆணையாளர் மற்றும் பழைய மாணவர் என். தனஞ்செயன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.பாடசாலையின் ஸ்தாபகர் நல்லையா மாஸ்டர் உருவப்படத்தை மாணவர்கள் தாங்கிச் சென்றனர்.
இந்தப் பேரணியில் பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பெருமளவில் கலந்துகொண்டனர்.மூன்று இனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் கண்காட்சி பவனி மற்றும் பல்வேறு வகையான வாகனங்கள் பேரணியை சிறப்பித்தன.பேரணி புகையிரத நிலைய வீதி, அரசடி பல்கலைக்கழக சுற்றுவட்டம், திருமலை ஊடாக தண்டவன்வெளி வரை சென்று மீண்டும் புகையிரத நிலைய வீதியூடாக பாடசாலைக்கு திரும்பி முடிவடையப்பட்டது.






