உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் தீர்ப்பால் தீர்மானிக்கப்படும் – தயாசிறி ஜயசேகர.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான வழக்குத் தீர்ப்பு எதிர்வரும் 17ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இது கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான வழிகாட்டியாக அமையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமானால் அதன் தலைமைத்துவத்தில் மாற்றம் அவசியமாக இருப்பதாகவும் கூறினார்.


நடந்த இரண்டு–மூன்று ஆண்டுகளில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளூராட்சி, நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணைக்குழுவால் கட்சியை செயலிழந்த நிலையில் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது கட்சி அலுவலகத்தை கைப்பற்றி வைத்துள்ளவர்களுக்கு எந்தவொரு சட்டபூர்வ அதிகாரமும் இல்லை; அதே நேரத்தில், அடிமட்டத் தொண்டர்கள் கட்சியை மீண்டும் புத்துயிர் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.சுமார் 30 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த ஒரு மாபெரும் கட்சியின் தலைமை நிர்ணயத்தை இந்த நீதித்துறை தீர்ப்பே தீர்மானிக்கவுள்ளதாக அவர் வலியுறுத்தி, நீதித்துறையில் முழுமையான நம்பிக்கை உள்ளதென தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0