இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.!
இரு சக்கர வாகனங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்து காலி மாவட்டத்தின் கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதிவேகமாகப் பயணித்த இரு சக்கர வாகனம் ஒன்று, முன்னால் சென்ற மற்றொரு இரு சக்கர வாகனத்துடன் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை செலுத்திய நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மற்றைய இரு சக்கர வாகனத்தின் செலுத்துநரான 67 வயதுடைய முதியவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.