உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வெள்ளாங்குளம் சந்தி பகுதியில் உழவு இயந்திரமொன்று தடம்புரண்டதில் பன்னிரெண்டு பேர் படுகாயம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மன்னார் – இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளங்குளம் சந்தி பகுதியில் உழவு இயந்திரமொன்று தடம்புரண்டதில் பன்னிரெண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.மன்னார் இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்பை கடவையில் இருந்து ஏ 32 வீதி வழியாக வெள்ளாங்குளம் நோக்கி பயணித்த உழவு இந்திரம் ஒன்று துணுக்காய் நோக்கி திருப்ப முற்பட்ட சமயம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில் உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டியில் இருந்த பன்ணிரெண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் ஆதரவைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

படுகாயமடைந்த ஐந்து பேர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையிலும் ஏழு பேர் முழங்காவில் ஆதார வைத்திய சாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த உழவு இயந்திரத்தில் 15 பேர் வரையில் மரண வீடு ஒன்றுக்கு சென்று வெள்ளங்குளம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அனத்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0