உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பணி இடைநீக்கத்திற்கு எதிராக கவரவலை தோட்டத் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

நேற்று (05) காலை 7.30 மணியளவில் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சாமிமலை பகுதியில் அமைந்துள்ள, ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான கவரவலை தோட்டத்தில், தோட்ட முகாமையாளர் தன்னிச்சையாக பணி இடைநீக்கம் செய்த 8 தொழிலாளர்கள், தொழிற்சங்க பேதமின்றி அதே தோட்டத்தின் ஆலய வளாகத்தில் இரவு பகலாக சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


இப் போராட்டத்திற்கு ஆதரவாக, நேற்று (05) கவரவலை தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இன்றைய தினம் (06), கவரவலை ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பீ’ பிரிவு தொழிலாளர்கள் உள்ளிட்ட, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்கள், கடந்த 44 நாட்களாக வழங்கப்படாத ஊதியத்துடன் மீண்டும் தொழில் வழங்கப்படும் வரை பணிக்கு செல்லமாட்டோம் என்ற கோரிக்கையுடன் பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்துள்ளனர்.


இந்நிலையில், தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று போராட்ட இடத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.குறிப்பாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளரும் தேசிய அமைப்பாளருமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி தலைவர் மற்றும் மாவட்ட பிரதிநிதி அண்ணா சந்திரசேகரன், தொழிலாளர் கட்சி தலைவர், தேசிய மக்கள் சக்தி கட்சியின் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறினர்.


இதனிடையே, நாளை (07) காலை ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரியின் காரியாலயத்தில், கவரவலை தோட்ட முகாமையாளர், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்கள் மற்றும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0