பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் விசேட மரநடுகை.!
பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மரநடுகை வேலைத்திட்டம், இன்று (2026.02.06) முற்பகல் ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், அரச நிறுவன வளாகங்களைப் பசுமையாக்குவதும் இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும். ஹட்டன் பொலிஸ் சுற்றாடல் பிரிவின் அதிகாரி சுந்தர அவர்களின் வழிகாட்டலும் ஒருங்கிணைப்பும் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஹட்டன் மாவட்ட நீதிபதி திரு. ஏ. பீற்றர் போல் அவர்கள் கலந்து கொண்டு, அடையாள ரீதியாக மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் பெறுமதிமிக்க பல மரக்கன்றுகள் நடப்பட்டன.இந்நிகழ்வில் ஹட்டன் நீதிமன்ற பதிவாளர் இசுரு சேனானந்த, ஹட்டன் பொலிஸ் சுற்றாடல் பிரிவின் அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



