உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

புதுடில்லி பறந்த ரில்வின் குழு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் அழைப்பின் பேரில் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை புதுடில்லிக்குப் புறப்பட்டனர்.

புதுடில்லியை அடுத்து குஜராத் மற்றும் கேரள மாநிலங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்யவுள்ளனர். அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும் அவர்கள் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.

இந்தியாவில் விவசாயம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான மையங்களை அவர்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விஜயத்தில் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடன் நிறுவனங்களுக்கு இடையேயான ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஜனக, நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், கிட்ணன் செல்வராஜ், ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு உறுப்பினர் ஹேமதிலக கமகே மற்றும் ஜே.வி.பியின் சர்வதேசக் குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுபாஷினி ஆகியோர் இணைந்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

37 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

79 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

71 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0