பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் இலங்கை போக்குவரத்து சபையினர்.!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையினர் தமது பேருந்து சேவைகளை சீராக மேற்கொள்ளாமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை 750 வழித்தடத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6:00 மணிக்கு பருத்தித்துறை நோக்கி வரவேண்டிய பேருந்து 6:50 மணிக்கே தனது சேவையை தொடர்ந்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு விசனங்கள் மக்களால் முன்வைக்கபடுகிறது.