உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சுற்றுலாத்துறையில் இலங்கையின் அடுத்தகட்ட நகர்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை, இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இலங்கையின் சுற்றுலாத்துறையை உலகத்தரம் வாய்ந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 20,000 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை 40,000 அதிகரிப்பதற்கும், எதிர்வரும் காலத்தில் 100,000 அதிகரிப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், டுபாயில் நடைபெற்ற ‘இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா’ முதலீட்டாளர் மன்றத்தில் உரையாற்றிய இலங்கையின் தூதரக அதிகாரி, சுற்றுலாத்துறை மாத்திரமன்றி கட்டுமானம், விவசாயம் மற்றும் சரக்கு போக்குவரத்து துறைகளிலும் அந்நிய நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதற்காக வரிச் சலுகைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரச சேவைகள் போன்ற ஊக்குவிப்பு திட்டங்களை இலங்கை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0