செம்பியன்பற்றில் பாரம்பரிய தென் மோடி நாட்டுக்கூத்து காப்புப் பாடலுடன் ஆரம்பம்.!
இன்றைய தினம் மாலை 5 மணியளவில் செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில், அண்ணாவியார் கலைச்சாரம் றோக்கு யூட்சன் செபஸ்தியார் அவர்களின் நெறிப்படுத்தலில், யுவானியர் தென் மோடி நாட்டுக்கூத்தின் காப்புப் பாடல் ஆலயத்தில் செம்பியன்பற்று பங்கு மக்களின் முன்னிலையில் பாடப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த தென் மோடி நாட்டுக்கூத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, எதிர்வரும் வைகாசி மாதம் 26 ஆம் திகதி பிற்பகல் 9.30 மணியளவில் மேடையேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, செம்பியன்பற்று பங்கு மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய நிகழ்வாக இடம் பெற்று வரும் புனித செபஸ்தியார் திருவிழாவின் விருந்து உபசார நிகழ்வு, செம்பியன்பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் அவர்களின் தலைமையில், காப்புப் பாடலைத் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வில், வடமராட்சி கிழக்கு பகுதி முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

