யாழில் மகிழுந்து தடம் புரண்டதில் மூவர் படுகாயம்!
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மகிழுந்து ஒன்று தடம்புரண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
அச்சுவேலி – வல்லைப் பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து அருகிலிருந்த பாலத்திற்குள் மோதித் தடம்புரண்டது.
விபத்தின் போது மகிழுந்து சேற்றில் புதைந்த நிலையில் காணப்பட்டதுடன், அதில் பயணம் செய்திருந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகிய மூவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
திருநெல்வேலி – ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த குடும்பமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
