கொழும்பில் சற்றுமுன் நடந்த கார் விபத்து: பாதசாரி ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு – பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாற்றுப் பாதையில் சிறிமங்கலவத்த வீதிக்கு அருகில் கார் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து கெஸ்பாவ நோக்கிச் சென்ற கார், பாதசாரி மீது மோதியதில் பலத்த காயமடைந்த நபர், பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.