உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

துணுக்காய் ஒளிரும் வாழ்வு அமைப்பினரை சந்தித்த சத்தியலிங்கம் எம்.பி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
34 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ஒளிரும் வாழ்வு அமைப்பினரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று (13.01.2026) சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஒளிரும் வாழ்வு அமைப்பினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றியும் அமைப்பின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் வளமான எதிர்காலத்திற்காக விசேடமாக உருவாக்கப்பட்டு செயற்பட்டுவரும் இந்த அமைப்பின் தேவைப்பாடுகளை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்ப்பதற்கு தாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா, ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

47 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

64 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

69 0 0