உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிரதமரை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அமைச்சரவையை திருத்தம் செய்யுங்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அமைச்சரவைத் திருத்தம் செய்யுமாறு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், பிரதமர் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள சர்ச்சைக்குரிய கல்வி மறுசீரமைப்பினூடாக அரசாங்கத்தின் கீழ் நாடு, மக்கள், புத்த சாசனம் என்பன பாரதூரமான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்பது உறுதியாகத் தெரிகிறது.

இதுபோன்ற பலவீன செயற்பாடுகள் மற்றும் மக்கள், நாடு தொடர்பில் முற்போக்கு சிந்தனையில்லாமல் அரசாங்கமொன்றின் நேரடி பாதிப்புகள் நாட்டையும் மக்களையுமே சாரும் என்பது திருத்தங்களில் தெரியவருகிறது.

கல்வி மறுசீரமைப்புக்காக பிக்குகள், ஏனைய மதத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிபுணர்களின் நிலைப்பாடுகளை பெற்றுக்கொள்ளாமையானது அதன் வெளிப்படைத் தன்மை இல்லாமல் போயுள்ளது.

பிக்குகளின் வரலாற்று உரிமைகளை நிறைவேற்றி நாட்டையும் மக்களையும் புத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்கு அரச தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விரைவாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

64 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

45 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

63 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

67 0 0