வசதி குறைந்த மாணவர்கள் 2000 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!
கொட்டகலை பிரதேசத்தில் கல்வி கற்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் போது குத்து விளக்கேற்றி திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, பிரதேச சபை உறுப்பினர்களான கண்ணதாசன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து, ஹரிங்டன், வூட்டன் மற்றும் பெரக்கும்புர வித்தியாலயங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இந்தத் திட்டத்தின் ஊடாக மொத்தமாக 2,000 மாணவர்கள் பயனடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.