• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண அலுவலர்களையும், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய ஆளுநர்!

Bharathy by Bharathy
February 11, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
வடக்கு மாகாண அலுவலர்களையும், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய ஆளுநர்!
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ தலைமையில், இலங்கையில் பணியாற்றும் ஐ.நா.வின் அனைத்து முகவர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான வடக்கு மாகாண அலுவலர்களையும், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களையும் ஆளுநர் செயலகத்தில் இன்று காலை (11.02.2025) தனித் தனியாக சந்தித்துக் கலந்துரையாடினர்.

முன்னதாக, வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும், அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண ஆளுநருடன், ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருடன், ஐ.நா.வின் அனைத்து முகவர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபலானின் வரவேற்புரையைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் உரையாற்றினார்.

ADVERTISEMENT

ஐ.நா.வின் பல்வேறு அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், குறிப்பாக மீள்குடியமர்வின்போதான உதவிகளை மறக்க முடியாது எனக் குறிப்பிட்டார். அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைவதற்கு அந்த உதவிகள் பெரிதும் உறுதுணையாக இருந்ததாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும் கிராமிய அபிவிருத்தியில் இன்னும் பல மைல் தூரம் பயணிக்கவேண்டியிருப்பதைக் குறிப்பிட்ட ஆளுநர், அந்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் உதவிகளைச் செய்யவேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.போருக்கு முன்னரான வடக்கின் ஏற்றுமதி நிலைமையையும் தற்போதைய நிலைமையையும் சுட்டிக்காட்டிய ஆளுநர், விவசாயம் மற்றும் மீன்பிடியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பன பிரதேச செயலர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் கலந்துரையாடாது தன்னிச்சையாக கடந்தகாலங்களில் வர்த்தமானியில் தமது ஆளுகைப் பிரதேசங்கள் என மக்களின் குடியிருப்பு மற்றும் வயல்காணிகளை வெளியிட்டமையால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை இன்னமும் தொடர்வதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

ஆளுநரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, வடக்கைச் சேர்ந்த பல தரப்பட்டவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம் எனக் குறிப்பிட்டதுடன் முன்னுரிமை அடிப்படையில் வேலைத் திட்டங்கள் அமையும் எனவும் தெரிவித்தார்.

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாணப் பயணம் தொடர்பிலும் அவர் இதன்போது வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் குறிப்பாக மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படும் என்ற உறுதிமொழி தொடர்பிலும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி இங்கு பிரஸ்தாபித்தார். பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்துள்ள வர்த்தக நடவடிக்கைகளால் சிவில் சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் கலந்துரையாடியதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மக்களுக்கு வாக்குறுதியளித்த பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளமையையும் அவர் இங்கு நினைவுகூர்ந்ததுடன் இந்தப் பகுதி மக்கள் முதல் தடவையாக அரசாங்கத்துக்கு தேர்தலில் பெருமளவு ஆதரவு வழங்கியுள்ளமையும் சுட்டிக்காட்டினார். வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.காலநிலை மாற்றத்தின் சவால்கள் தொடர்பிலும், தென்பகுதிக்கும் வடக்குக்கு இடையிலான இரட்டை இடைவெளி தொடர்பாகவும் வடக்கு மாகாண பிரதம செயலர் குறிப்பிட்டார்.

இளைய சமூகத்தைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விவரித்தார். வேலைவாய்ப்பின்மை, கீழுழைப்பு ஆகியன தொடர்பிலும் பிரதம செயலர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை இலத்திரனியல் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு யு.என்.டி.பி. நிறுவனம் ஆதரவு வழங்குவதற்கு பிரதம செயலர் நன்றிகளைத் தெரிவித்தார்.வடக்கு மக்களின் நம்பிக்கையை தக்கவைப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது தொடர்பாகவும் ஐ.நா. முகவர் அமைப்பின் பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டனர். மேலும், வடக்கு மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இந்தச் சந்திப்பின் முடிவில் சுகாதார நகர திட்டத்துக்கு யாழ்ப்பாண நகரம் தெரிவு செய்யப்பட்டமைக்கான சான்றிதழும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியால் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது யாழ். மாநகர சபை ஆணையாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடாதிபதி மருத்துவர் ஆர்.சுரேந்திரகுமாரனும் ஆகியோரும் உடனிருந்தனர்.இதைத் தொடர்ந்து வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்களுடன் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மற்றும் ஐ.நா. முகவர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! Today
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! Today
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      சுயேட்சைக் குழுத் தலைவருக்கு எதிராக சக வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் கையளிப்பு..!

      சுயேட்சைக் குழுத் தலைவருக்கு எதிராக சக வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் கையளிப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மன்னார் பிரதேச சபை தேர்தலில் மாட்டு வண்டி சின்னத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு கிடைக்கப்பெற்ற...

      மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்வு..!

      மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்வு..!

      by Thamil
      May 28, 2025
      0

      யாழ் வடமராட்சிக் கிழக்கு - செம்பியன் பற்று பகுதியில் இன்றைய (28) தினம் மருதங்கேணி பொலிஸாரால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது...

      முதலமைச்சர் தும்புத்தடி என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா? – சிவாஜிலிங்கம் பதிலடி..!

      முதலமைச்சர் தும்புத்தடி என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா? – சிவாஜிலிங்கம் பதிலடி..!

      by Thamil
      May 28, 2025
      0

      "முதலமைச்சர் தும்புத்தடி என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா?" எனத் தமிழ்த் தேசியப் பேரவையின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி...

      மாகாண சபைத் தேர்தலை முடிந்தால் நடத்திக் காட்டுமாறு அநுர அரசுக்கு மொட்டுக் கட்சி சவால்..!

      மாகாண சபைத் தேர்தலை முடிந்தால் நடத்திக் காட்டுமாறு அநுர அரசுக்கு மொட்டுக் கட்சி சவால்..!

      by Thamil
      May 28, 2025
      0

      முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்திக் காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது. இந்தச் சவாலை முன்னாள்...

      மக்கள் விரும்பாத செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் – உபாலி சமரசிங்க தெரிவிப்பு..!

      மக்கள் விரும்பாத செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் – உபாலி சமரசிங்க தெரிவிப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      "மன்னார் மாவட்டத்தில் காற்று, கணிய மணல் போன்ற வளங்கள் காணப்படுகிறது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் விரும்பாத செயற்பாடுகளை செய்ய மாட்டோம்" என கூட்டுறவு பிரதி அமைச்சரும்,...

      விவசாயிகளுக்கு வெங்காய விதை வழங்கி வைப்பு..!

      விவசாயிகளுக்கு வெங்காய விதை வழங்கி வைப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 41 விவசாயிகளுக்கு வெங்காய உற்பத்திக்காக 120 கிலோ சின்னவெங்காயம்...

      உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்..!

      உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்..!

      by Thamil
      May 28, 2025
      0

      முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாரதி வித்தியாலயத்தின் இன்றைய தினம் (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள்...

      விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      கொழும்பு மாவட்டம், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை...

      ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த இலங்கை வங்கி ஊழியர்கள்.!

      ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த இலங்கை வங்கி ஊழியர்கள்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      நுவரெலியாவில் இலங்கை வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து ஊக்கத்தொகையை வழங்காததால் அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நுவரெலியா பிரதான இலங்கை வங்கிக்கு...

      Load More
      Next Post
      லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

      லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

      காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

      காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை இடம்பெறாது!

      தையிட்டி விகாரை விவகாரம் – கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ் முஸ்லிம் மக்களும் ஆதரவு!

      தையிட்டி விகாரை விவகாரம் - கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ் முஸ்லிம் மக்களும் ஆதரவு!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி