Browsing: இலங்கை செய்திகள்

தற்கொலைககு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம், தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையில்  செவ்வாய்க்கிழமை (03-09-2024) வந்தடைந்தது.  இத் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை றோட்டரிக் கழக அங்கத்தவர்களால் வரவேற்கப்பட்டார்கள்.. தைரியம்,இரக்கம், பொறுப்பேற்றல் என்ற பெயரையுடைய, தன்னார்வ தொண்டர் நிறுவனம், ரோட்டரிக் கழக அனுசரணையுடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.  இலங்கையில் நாளொன்றுக்கு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 11பேர் ஆக உள்ளது. தற்கொலை முயற்சிகளை தடுப்பதுடன், மக்களின் உளவள நலனை மேம்படுத்தவும் தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்படுபவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி, அதிலிருந்து விடுவிப்பதற்கான வழி வகையினை ஏற்படுத்துவதற்குமாகவே இவ் விழிப்புணர்வூட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  சிசிசி 1333(ccc1333) என்னும் இலவச ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதனை நோக்காக கொண்டு, இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக தொடர் துவிக்சக்கர வண்டியோட்ட நிகழ்வை நடாத்தி வருகின்றது.  இத் தொடர் சைக்கிளோட்டமானது திருகோணமலைக்கு வந்தடைந்தது அவர்களுக்கு மதிய உணவு ரோட்டரிஇல்லத்தில் கொடுக்கப்ப் பட்டது        பின்னர் தற்கொலையின் தாக்கம் குறித்து மக்களை விழிப்பூட்டும் முகமாக நிகழ்ச்சி ஒன்றும் நடாத்தப்பட்டது. அத்துடன் தற்கொலை மனப்பாங்கை நீக்கக்கூடிய ஆலோசனைகள் 1333 என்ற தொலைபேசி இலக்கம் அடங்கிய கையேடுகளை பொது மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது.

இலங்கையின் சிறுவர்களில் மூன்றில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் போசாக்கின்மை குறித்து ஆராய்வதற்காக…

இலங்கையின் உருக்குலைந்த பொருளாதாரத்தைச் சீர்செய்து நிலைப்படுத்துவதற்கும் இனவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்குமே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அதிமுன்னுரிமை கொடுத்துச் செயற்படும் என்று செப்டெம்பர் 21 ஜனாதிபதி தேர்தலின் முன்னரங்க…

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…

சுமார் 4 அரை இலட்சம் ரூபா பெறுமதியுடைய ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபரொருவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட…

ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை (04) ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை, இன்று 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை…

வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக சபைக்கு அறிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில்…

போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை வெவஸ்ஸ பகுதியைச் சேர்ந்த…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு…

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த வர்த்தகர் ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 33 இலட்சம்…