27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை (04) ஆரம்பமாகியுள்ளது.   

இதேவேளை,  இன்று 04ம் திகதி முதல்  06ம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 

மேலும்,  மாவட்டச் செயலகம், தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸார் தமது தபால் மூல வாக்குகளை வாக்களிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் தங்களது தபால் மூல வாக்குகளை வவுனியா பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையத்தில் வாக்களிக்கின்றனர்..   

அத்துடன்,  வவுனியா மாவட்டத்தில்128,585, மன்னார் மாவட்டத்தில் 90,707, முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர் உள்ளடங்கலாக வன்னி தேர்தல் தொகுதியில் வாக்களிக்க 306,081 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலி: சாரதி தலைமறைவு

User1

செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்!

User1

கோர விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி !

User1

Leave a Comment