உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
67 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக எல்நினோ காலநிலையை எதிர்கொள்வது தொடர்பாகவும்  கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போக நெற்ச்செய்கையின்   போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டன.

இதன்போது விவசாயத்துறையுடன் தொடர்புடைய திணைக்களங்களினால் துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களால் விளக்கமளிக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட பதில் விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் விரிவுரையாளர்கள், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது சிறுபோக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடை பின்னர் அறுவடை முடிந்த வயல்களை ஒரு மாத காலத்திற்கு கால்நடைகளின் வாழ்வாதாரத்துக்காக தீயிட்டு எரிப்பதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அப்படி தீ வைக்க வேண்டுமாயின் சமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆலோசனைக்கு அமைவாக தீயிட்டுக் கொடுத்த முடிவு எனவும் தெரிவித்தார்

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்திக்க மறுத்த சஜித்!

செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவிர்த்துச் சென்றமை தென்னிலங்கை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக்…

58 0 0
இலங்கை செய்திகள்

கன்னியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய புதிய கட்டுமானம் – நீதிமன்றத் தடையை மீறி அடிக்கல் நாட்டியது தொல்பொருள் திணைக்களம்

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அவ்விடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஆரத்தழுவி கண்கலங்கிய ஐரோப்பிய ஒன்றியத் தூதர்  – செம்மணியில் உருக்கமான தருணம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை…

86 0 0
இலங்கை செய்திகள்

டிக்கோயா மாநகர சபை ஊழியர்கள் இன்று அலுவலகத்தை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் அனைத்து ஊழியர்களும்,  இன்று மாநகர அலுவலகத்தை மூடி, பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன் பொது சந்தை வீதியில் நடைபாதை…

37 0 0