உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

AI மூலம் முதலாம் உலகப் போர்க் கதைகளுக்கு உயிரூட்டும் பாடசாலை மாணவர்கள்!

உலக செய்திகள் 14 மணி நேரம் முன்
18 பார்வைகள்

இங்கிலாந்தின் ட்ரூரோவில் உள்ள பெனாயர் பாடசாலையைச் சேர்ந்த வரலாற்று மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலாம் உலகப் போர் வீரர்களின் நாட்குறிப்புகளைத் குறும்படங்களாக உருவாக்கியுள்ளனர்.

கோர்ன்வால் பகுதியைச் சேர்ந்த ஜோன் ஃபிரெஞ்ச் என்ற சுரங்கத் தொழிலாளி, முதலாம் உலகப் போரின் போது ‘251-வது சுரங்கப் படைப்பிரிவில்’ (Tunnelling Company) சேர்ந்து பணியாற்றியவர்.

அவர் தன் போர் அனுபவங்களை நாட்குறிப்புகளாக எழுதியிருந்தார்.

மாணவர்கள் அந்த நாட்குறிப்புகள் மற்றும் அகழிகளின் காட்சி விவரிப்புகளை AI மென்பொருளில் உள்ளீடு செய்து, தத்ரூபமான படமாக உருவாக்கினர்.

இந்த நாட்குறிப்புகள் அவரது குடும்பத்தினரின் பரணில் கண்டெடுக்கப்பட்டவை.

இந்தப் படத்தைப் பார்த்த அவரது மருமகள் பென்னி பிக்டன், “இது நெஞ்சை உருக்கும் படைப்பாக உள்ளது” எனக் கூறி கண்ணீர் விட்டு நெகிழ்ந்தார்.

இந்த நிலையில் குறித்த முயற்சிக்காக ‘வெஸ்டர்ன் ஃபிரண்ட் எசோசியேஷன்’ வழங்கிய உள்ளூர் வரலாற்று ஆராய்ச்சிக்கான மெல்கம் டூலின் பரிசை (Malcolm Doolin Prize) இங்கிலாந்தின் ட்ரூரோவில் உள்ள பெனாயர் பாடசாலை வென்றுள்ளது.

“திரைப்படம் எடுக்கத் தேவையான பெரும் பொருட்செலவு மற்றும் நடிகர்கள் இல்லாத சூழலில், புத்தகங்களில் முடங்கிக்கிடக்கும் வரலாற்றுப் பதிவுகளுக்கு உயிரூட்ட AI ஒரு சிறந்த கருவியாகப் பயன்படுகிறது” என உள்ளூர் வரலாற்று ஆசிரியர் டோனி ஸ்மித் தெரிவித்தார்.

மாணவர்கள் தங்கள் சொந்த ஊரைச் சேர்ந்த மனிதர்களின் உண்மையான கதைகளை ஆராயும்போது, அது வரலாற்றை உணர்வுபூர்வமாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது என வரலாற்று ஆசிரியை டினா டுருலோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் கனடாவில் இலங்கை வைத்தியர் கைது!

டொராண்டோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குழந்தைகளுக்கான மருத்துவமனையான Hospital for Sick Children (SickKids)-இல் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான இணையவழி…

43 0 0
உலக செய்திகள்

ஈரானில் அமெரிக்கா நடத்திவரும் போருக்கான செலவு 37.5 பில்லியன் டொலராக உயர்வு!

ஈரானில் அமெரிக்கா நடத்திவரும் போருக்கான செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth ) செவ்வாய்க்கிழமை…

26 0 0
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கன மழை – 20 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நுரிஸ்தான் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

34 0 0
உலக செய்திகள்

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை பிரான்ஸ் தடை செய்துள்ளது!

2027 ஜனவரி முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், இளைஞர்கள் இத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும்…

19 0 0