உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

தாக்குதலுக்கு மத்தியிலும் மறைமுக இராஜதந்திரப் பேச்சுகள் தொடர்வதாக ஈரான் அறிவிப்பு!

உலக செய்திகள் 16 மணி நேரம் முன்
86 பார்வைகள்

அமெரிக்கா நடத்திய சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவுடனான மறைமுக இராஜதந்திரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகேய் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாட்களில் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு சில யோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போர் மற்றும் இராஜதந்திரம் ஆகிய இரண்டையும் ஈரான் தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான கருவிகளாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலும் முறிந்துவிடவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி! – அமெரிக்கா அறிவிப்பு

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீது 50% கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) அறிவித்தார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட…

13 0 0
உலக செய்திகள்

சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகை – ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுத்திகள், சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று (21) அறிவித்தனர். இந்த அறிவிப்பானது ஈரானுடனான போரில் அமெரிக்காவிற்கு எதிராக…

11 0 0
உலக செய்திகள்

உயிரிழந்த மூன்று அமெரிக்க வீரர்களுக்குப் பதிலாக, ஈரான் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானின் திறனை “மேலும் பலவீனப்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டு, ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்ளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா…

13 0 0
உலக செய்திகள்

குயானாவில் 133 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது!

குயானாவில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்; அதேவேளையில், காணாமல்…

31 0 0