அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வு; வாகனங்களுடன் சிக்கிய சாரதிகள்.!
அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்தி வேறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும், உழவு இயந்திரம் ஒன்றும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று 19.07.2026 இரவு திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில் வழங்கப்பட்ட மணல் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி கல்லாறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு டிப்பர்களும் மற்றும் ஒரு உழவு இயந்திரத்துடன் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைதான சாரதிகள் 5 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தடையப் பொருட்கள் 22.07.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்தார்.
