உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை!

உலக செய்திகள் 23 மணி நேரம் முன்
53 பார்வைகள்

ஜோர்தானின் அக்கபா சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் “குறிப்பிட்ட மற்றும் நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்” இருப்பதாகக் கூறி, தமது நாட்டுப் பிரஜைகளை, அந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குறிப்பிட்ட நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அக்கபா வானூர்தி நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த மக்களை ஜோர்தான் அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், ஜோர்தானில் உள்ள இராணுவத் தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்ட ஆலோசனையை தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஜோர்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி! – அமெரிக்கா அறிவிப்பு

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீது 50% கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) அறிவித்தார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட…

13 0 0
உலக செய்திகள்

சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகை – ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுத்திகள், சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று (21) அறிவித்தனர். இந்த அறிவிப்பானது ஈரானுடனான போரில் அமெரிக்காவிற்கு எதிராக…

11 0 0
உலக செய்திகள்

உயிரிழந்த மூன்று அமெரிக்க வீரர்களுக்குப் பதிலாக, ஈரான் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானின் திறனை “மேலும் பலவீனப்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டு, ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்ளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா…

13 0 0
உலக செய்திகள்

குயானாவில் 133 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது!

குயானாவில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்; அதேவேளையில், காணாமல்…

31 0 0