மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் கிலன்டில் தோட்ட பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து அப் பகுதியில் உள்ள மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ், புஷ்பகுமார அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களின் பணிப்புரைக்கு அமைய மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் கிலன்டில் தோட்ட பிரேமா பிரிவிற்கு சென்றனர்.
கிலன்டில் தோட்ட பிரேமா பிரிவில் உள்ள சாலையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது உயிரிழந்த நபர் மஸ்கெலியா நகரில் உள்ள பேருந்து நிலைய வீதியில் உள்ள வயதுடைய 48 பரமேஸ்வரன் ஆனந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சடலம் ஹட்டன் பொலிஸ் நிலைய ( சொக்கொ ) கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் நீதிமன்ற நீதிவான் பார்த்த பின்னர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்நிலையில் உடற்கூற்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.










