தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது.!
தேசிய தாவரவியல் பூங்காக்கள் 2025ல் 1.394 பில்லியன் ரூபா வருமானம் சம்பாதித்தது – கடந்த 2025ஆம் ஆண்டில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் மொத்த வருமானம் 1.394 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வருமானம் 2024ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% அதிகரித்துள்ளது, அதற்கான முக்கிய காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
‘டித்வா’ புயலின் தாக்கம் இருந்தபோதிலும், பூங்காக்களின் இயற்கை மற்றும் தாவரவியல் ஈர்ப்புகள் மூலம் வருமானம் உயர்ந்துள்ளது. திணைக்களத்தின் கீழ் பேராதனை, ஹக்கலா, கம்பஹா, சீதாவக்க ஈர வலய, மிரிஜ்ஜவில வறண்ட வலய மற்றும் கணேவத்த வன மூலிகைத் தோட்டங்கள் நிர்வகிக்கப்படுகின்றன; இதில், பேராதனை பூங்காவிற்கு கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அனைத்து பூங்காக்களையும் பார்வையிட இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டசுற்றுலாப் பயணிகள் வந்தனர். நுழைவுக் கட்டணம், தாவர விற்பனை மற்றும் இதர வசதிகள் மூலம் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.