உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தனியார் சுற்றுலா பேருந்து – இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கை காவல் துறை தெரிவித்ததன்படி, யட்டியாந்தோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட தணகொலவத்த பகுதியில் தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இன்று (20) மாலை 4.00 மணியளவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து குறித்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனத்துடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் காயமடைந்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அப்பகுதியில் நிலவும் கடும் மழையால் வீதி வழுக்கலான நிலையில் காணப்பட்டதால், அதுவே விபத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.


காலநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு காவல் துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

5 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

54 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0