உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வடக்கு மாகாணத்தில் ‘நிழல் அமைச்சர்கள்’ நியமனம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

வடக்கு மாகாண சபை செயலற்ற நிலையில் இருக்கும் சூழலில், மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட துறைகளுக்கென ‘நிழல் அமைச்சர்கள்’ நியமித்து ஆட்சியை முன்னெடுக்க அரசு முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது, வடக்கு மாகாணத்தில் துறைகளுக்கென நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்து, அவர்களூடாக நிர்வாகத்தை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, சுகாதாரத் துறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, கல்வித் துறைக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரங்களுக்கு ரஜீவன், உள்ளூராட்சி சபைகளுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளுக்கு திலகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


அண்மையில் வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றபோது, குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே அழைக்கப்பட்டதாகவும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாண சபை அமைப்புக்கு எதிராக முன்பு நிலைப்பாடு எடுத்தவர்கள், தற்போது அதே நிர்வாக அமைப்பில் தங்களது ஆதரவாளர்களை நியமிப்பது அரசியல் நேர்மையற்ற செயற்பாடாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், சட்டப்பூர்வமான நிர்வாக முறைகளைப் பின்பற்றுமாறு அரசைத் தாம் வலியுறுத்துவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

53 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

54 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

55 0 0