உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கிளிநொச்சியில் கொலை சம்பந்தமான வழக்கில் நபர் ஒருவருக்கு மேல் நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை..!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

கிளிநொச்சி மேல் நீதிமன்றம், கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டமை குற்றங்களில் தொடர்புடைய நபருக்கு ஐந்து ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


இந்த வழக்கு சம்பந்தமாக, 2022 மே மாதம் 8ஆம் திகதி, முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் குற்றவாளி ஒருவர் ஓட்டோ சாரதியை கத்திமுனையில் அச்சுறுத்தி அவரது ஓட்டோவை கடத்தியிருந்தார். இதனையடுத்து, பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்து, ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை ஓட்டோவால் மோதி படுகாயம் ஏற்படுத்தியிருந்தார்.

குற்றவாளி கைது செய்யப்பட்டு வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.நேற்று, நீதிமன்ற நீதிபதி ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டு, குறித்த நபருக்கு ஐந்து ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 3,50,000 ரூபா மற்றும் மற்றையவருக்கு 5,00,000 ரூபா இழப்பீடு செலுத்தப்பட வேண்டிய கட்டளை விதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படாவிட்டால், முறையே ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடங்கள் கூடுதல் சிறைத் தண்டனையாக அமையும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

91 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

39 0 0