உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து; சட்டத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான ‘நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்’ நாடாளுமன்றத்தில் 152 மேலதிக வாக்குகளால் அமோகமாக நிறைவேற்றப்பட்டது.

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இந்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோரால் சில திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், அந்தத் திருத்தங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் நிராகரித்ததைத் தொடர்ந்து, எவ்வித மாற்றங்களுமின்றி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகரின் சான்றுரைப்படுத்தலைத் தொடர்ந்து, இது ‘2026 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டம்’ என உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம்,
1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் முழுமையாக நீக்கப்படுகின்றது.

தற்போது ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் மற்றும் எதிர்காலத்தில் அதற்கு உரித்துடையவர்கள் என அனைவருக்கும் இனிவரும் காலங்களில் அந்த கொடுப்பனவு நிறுத்தப்படும்.

இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நீண்டகால வரப்பிரசாதம் ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

91 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

39 0 0