உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் குரல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

“சிவில் சுதந்திரத்தை மீறும் வகையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்புச் சட்டம் அமையக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இந்தச் சட்டங்களின் விதிமுறைகள் பிரிட்டனின் தரங்கள் மற்றும் சர்வதேச நடைமுறைகளுடன் ஒத்திருக்க வேண்டும்.”

இவ்வாறு பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மியுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

வர்த்தக சீர்திருத்தங்கள், சட்டவாக்கப் பிரச்சினைகள் மற்றும் டித்வா பேரிடர் மீட்சி தொடர்பான விசேட கலந்துரையாடலுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் பிரிட்டனின் துணைப் பிரதமர் டேவிட் லாமியும் நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

ஜனநாயக ஆட்சி, வர்த்தக விரிவாக்கம் மற்றும் இருதரப்பு மானுட ஒத்துழைப்பு ஆகியவற்றை விரிவாகக் கலந்துரையாடும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தார். இதில் முதன்மையாக ஆட்சி, சட்டத்தின் ஆட்சி, காலநிலை நீதி, மனித உரிமைகள் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய துறைகளில் அதிகாரபூர்வ வளர்ச்சி உதவியை சீர்திருத்துவதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எடுத்துரைத்தார்.

மேலும் கொள்கை ரீதியான ஜனநாயக மதிப்புகளை, மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார தீர்வுகளுடன் சமநிலைப்படுத்துவது ஆட்சியில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அவர் இங்கு எடுத்துக்காட்டினார்.

ஊழலுக்கு எதிரான அரச குழுவின் மற்றும் அதன் உலகளாவிய எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக பிரிட்டனின் தலைமையை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், வெளிப்படையான நிறுவனங்களுக்கான அவசியத்தை இங்கு வலியுறுத்தினார். அத்துடன் இலங்கையில் பொது நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் நிலையான பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்தவும் பொறுப்புக்கூறல் நடைமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் தெரிவித்தார்.

இலங்கை – ஐக்கிய இராச்சியம் இடையேயான வர்த்தகம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதில், ஐக்கிய இராச்சியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இலக்கு நாடாக இருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார். மேலும் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வர்த்தக கூட்டாண்மை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்த தாராளமயமாக்கப்பட்ட தோற்றுவாய் விதிகளை அமுல்படுத்திய ஐக்கிய இராச்சியத்தின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டத்தின் மாற்றகட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வரவேற்றார். இலங்கை தொழில்களுக்கான குறிப்பிட்ட நன்மைகளை அவர் இங்கு தெரிவித்தார்.

இதில் இருதரப்பினரிடையேயும் சட்ட விடயங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. அதில் முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்புச் சட்டம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது.

சட்டத்தின் “கொடுமையான” பயன்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது கருத்தை முன்வைத்தார். குறிப்பாக அரசியல் எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை குற்றமாக கருதக்கூடிய பயங்கரவாதம் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு எதிராக இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.

நிர்வாகம் அல்ல, நீதித்துறை சட்ட விளக்கங்களை வழிநடத்த வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். நிகழ்நிலைக் காப்பு தொடர்பாக, குழந்தைகளைப் பாதுகாக்கும் அவசியத்தை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், சிவில் சுதந்திரத்தை மீறாமல் விதிமுறைகள் பிரிட்டனின் தரங்கள் மற்றும் சர்வதேச நடைமுறைகளுடன் ஒத்திருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

2025 ஆம் ஆண்டின் இறுதியில் டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரழிவுக்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் இறையாண்மை ஒற்றுமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

2025 டிசம்பரில் மானுட உதவி தொகுப்பை ஒரு மில்லியனாக அதிகரித்ததற்காக அவர் இங்கிலாந்தின் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இறுதியில், இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான வரலாற்று உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் அனுப்பிய தனிப்பட்ட இரங்கல் செய்திக்காகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பிரிட்டனின் துணைப் பிரதமர் லம்மிமியுடன் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், பிரத்தியேக செயலர் சுக்விந்தர் சோதி, துணை பிரதமரின் சர்வதேச பிரிவின் தலைவர் டேவிட் மேயர், சிறப்பு ஆலோசகர் பியோனா மேகர் மற்றும் முதல் செயலர் (அரசியல்) டாம் சோபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0