உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நுவரெலியா கிரெகரி ஏரி சுத்திகரிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

இன்று நுவரெலியா மாநகர சபை மதிப்பிற்குரிய மேயர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாநகர மன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் கிரெகரி ஏரி சுற்றுவட்டார நடைபாதைகள் மற்றும் அடைப்பு ஏற்பட்ட கால்வாய்களை சுத்திகரிக்கும் சிறப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் அவர்களின் மேற்பார்வையில் மாநகர சபை பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுச் சூழலை பாதுகாப்போம் என்ற தொனியில் நுவரெலியாவின் அழகை காப்போம் என்ற அடிப்படையில் இடம்பெற்றது.

இனி வரும் காலங்களில் நுவரெலியா கிரெகரி ஏரி பகுதியில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விட்டு செல்ல வேண்டாம் என ஆங்காங்கே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்படும் நுவரெலியா நகரையும் நகரை அண்டிய பகுதிகளையும் மிகவும் துப்பரவாகவும் தூய்மையான நிலையில் வைத்துக் கொள்ள நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் இதற்கு உதவ முன் வர வேண்டும் என நுவரெலியா மாநகர சபை முதல்வர் கேட்டு கொண்டு உள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0