உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புதிய அரசமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு உறுதி – பிரதி அமைச்சர் பிரதீப் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் மூலம் நிரந்தரத் தீர்வு காணப்படுமென பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், அரசமைப்பு உருவாக்கப் பணிகள் தொடர்பாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.அவர் தெரிவித்ததாவது:


“தமிழ் மக்களுக்கு நீண்டகாலமாகப் பிரச்சினைகள் நிலவி வருகின்றன. அவை இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசில் தமிழர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுவது அரசின் முக்கிய நோக்கமாகும்.இனவாதம் அற்ற நாடொன்றை உருவாக்குவதே எமது குறிக்கோள். அந்த இலக்கை நோக்கி அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது.புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

89 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0